NATIONAL

குனோங் பாலிங்கில் தீ 85 % அணைக்கப்பட்டு விட்டது

அலோர் ஸ்டார், பிப்.9:

பாலிங், குனோங் பாலிங் பகுதியில் கடந்த 4 நாட்களாக ஏற்பட்ட தீச்சம்பவங்களில் 85 விழுக்காட்டை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமது ஜாமில் மாட் டாவுட் கூறினார்.

ஆயினும், வானிலை நிலவரம் தொடர்ந்து வெப்பமாகவும் காற்றும் பலமாக வீசினால், அணைக்கப்பட்ட பகுதிகளில் தீ மீண்டும் பரவும் சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

“இதுவரையில், தீப்பரவிய பகுதிகளில் தரை மற்றும் ஆகாய மார்க்கமாக மெற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வழி 85 விழுக்காட்டு தீயை அணைத்துவிட்டோம். மீண்டும் இன்று காலை தொடங்கிய நடவடிக்கையின் போது சில பகுதிகளில் மட்டும் சிறிய அளவில் தீ மூண்டிருப்பதை அடையாளம் கண்டோம்” என்று ஜாமில் தெரிவித்தார்.

“அதேவேளையில், குனோங் பாலிங்கில் உள்ள மணல் தோண்டும் பகுதியை நோக்கி சிறிய அளவில் தீ பரவுவதை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று அவர் உறுதி அளித்தார்.


Pengarang :