SELANGOR

வீடமைப்புத் திட்டங்கள் பூர்த்தியாவதற்கு முன்னரே அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்!

பூச்சோங், பிப்.23:

சிலாங்கூரில் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு அல்லது ஒரே நேரத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

“மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவடைந்த பின்னர் சொத்துடைமைகளை வாங்கியவர்கள் அடிப்படை வசதி தொடர்பான பிரச்னைகளை எதிர்நோக்காதிருக்க இந்நடவடிக்கை அவசியம்” என்று பொதுப் போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.

“முன்பு போல், வீடமைப்புத் திட்டங்கள் முடிந்த பின்னர் அவற்றுக்கான அடிப்படை வசதிகளை நிர்மாணிக்க மேம்பாட்டாளர்கள் மறுத்த நிலை மீண்டும் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை” என்றார் அவர்.

இனி வரும் காலங்களில், வீடமைப்புத் திட்டங்கள் முடிவடைவதற்கு முன்னரே அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :