செமினி, பிப்.28-
செமினி இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் முகமது அய்மான் ஜைனாலி மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் வளர்ப்பு சகோதரர் என வர்ணிக்கப்படுகிறார்.
இந்த நெருக்கமான தொடர்பு காரணமாக செமினி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக பக்காத்தான் மகளிர் அணி தலைவர் சுரைடா கமாருடின் கூறினார்.
முன்பு இவர் சற்றுத் தடுமாறி பேசிய முகமது அய்மான், இப்பொழுதெல்லாம் அழகாக, தெளிவாகப் பேசுகிறார் என்றார் வேடிக்கையாக.
“இவர் ஒரு துடிப்புமிக்க இளைஞராக இருக்கிறார். மேலும், மந்திரி பெசாருடன் அணுக்கமாக இருக்கிறார். பல நல்ல விஷயங்களை இவர் அமல்படுத்துவார்” என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.