SELANGOR

மரணம் இறைவனின் எச்சரிக்கையா? சாத்திமின் அநாகரீகப் பேச்சு!

ஷா ஆலம், பிப்.28-

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினரின் மரணம் இறைவன் விடுத்துள்ள ஓர் எச்சரிக்கை என்று பூச்சோங் அம்னோ டிவிஷன் தலைவர் டத்தோ முகமது சாத்திம் டிமானின் பேச்சு இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் சமய நம்பிக்கைக்கும் முரணானது என்று கூறப்படுகிறது.

இந்த பேச்சானது மக்களின் மனதைக் கவரப் பிரயோகிப்படும் அநாகரீகமான பிரச்சார நடவடிக்கையாகும் என்று சுங்கை கன்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜவாவி அகமது முக்னி சாடினார்.

“சட்டமன்ற உறுப்பினரின் மரணம் பக்காத்தான் கூட்டணிக்கு இறைவன் விடுக்கும் கண்டனம் என்று கூறிடும் அம்னோவின் நோக்கம் என்ன?” என்று அவர் வினவினார்.

“சிலாங்கூரில் பக்காத்தானுக்கு ஆதரவு அதிகரித்து வருவதைக் கண்டு மன அழுத்தத்திற்கு அம்னோ தலைவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது” என்றார் அவர்.


Pengarang :