RENCANA PILIHANSELANGOR

சிங்கையில் நடைபெறும் எக்ஸ்போ மலேசியாவில் பங்கேற்க 20 சிலாங்கூர் தொழில்முனைவர்கள் தேர்வு

ஷா ஆலம், ஜூலை 22-

சிங்கப்பூரில் ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் 2019ஆம் ஆண்டு மலேசிய எக்ஸ்போவில் பங்கேற்க சிலாங்கூரைச் சேர்ந்த 20 தொழில்முனைவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தேர்வுபெற்ற தொழில்முனைவர்கள் ஒப்பனை பொருட்கள், உணவு, பானங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிக்கு வைக்கவிருக்கின்றனர்.

இந்தப் பொருட்களின் மதிப்பு 400, 000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அடிப்படை மற்றும் பொது வசதி, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் கூறினார்.

“நான்காவது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி உள்நாட்டு தொழில்முனைவர்கள் தங்களின் தயாரிப்பு பொருட்களை அனைத்துலக சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு ஓர் அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார் அவர்.
“சிலாங்கூர் பெவிலியன் என்ற கருப்பொருளோடு 10 சந்தை முகப்பிடங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :