NATIONALSELANGOR

சிலாங்கூரில் 3 மாவட்டங்களில் செப்டம்பர் 8 வரை வெப்ப நிலை நீடிக்கும்

ஷா ஆலம், செப்.2-

சிலாங்கூரில் 3 மாவட்டங்களில் இம்மாதம் 8ஆம் தேதி வரை வெப்ப நிலை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆயவகம் கூறியது. கோல லங்காட், கிள்ளான் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸை எட்டும் என்று அந்த ஆய்வகம் குறிப்பிட்டது.

இதே நிலை சிப்பாங் மற்றும் கோல சிலாங்கூர் போன்ற மவட்டங்களிலும் ஏற்படும். எனினும், இவ்விரு மாவட்டங்களில் வியாழன் வரை இடியுடன் கூடிய மழையும் இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை மீண்டும் வெப்ப நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், உலு லங்காட், கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் வியாழன் வரை இடியுடன் கூடிய மழையும் தொடர்ந்து ஞாயிறு வரை நீடிக்கும் என்றும் அந்த ஆய்வகம் விவரித்தது.


Pengarang :