ஷா ஆலம், செப்.4-
ஹூவாவேய் நிறுவனத்துடன் சிலாங்கூர் அரசு நடத்திய நேரடி சந்திப்பின் காரணமாக ஆசியானில் விவேக மாநிலமாக உருவாகும் சிலாங்கூரின் இலக்கு விரைவில் நிறைவேறுவதற்கு புதிய வாய்ப்பு ஒன்று பிறந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி தீர்வு என்ற உத்தரவு பிறப்பிக்கும் புத்தாக்க டிஜிட்டல் செயலியின் உருவாக்கம் தன்னை பிரமிக்கச் செய்ததாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“ஹூவாவேயின் வளர்ச்சி மிகவும் பிரமாண்டமானது. ஒரு சிறிய நிறுவனமாக சீனாவில் தொடங்கிய இந்நிறுவனம் இன்று தொழில்நுட்ப உலகின் மிகப் பெரிய சக்தியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது” என்றார் அவர்.
ஹூவாவேய் நிறுவனத்திற்கு மந்திரி பெசாருடன் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் டத்தொ தெங் சாங் கிம், ஹீ லோய் சியான் மற்றும் சிலாங்கூர் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி டத்தோ ஹாசான் அஸாரி இறிஸ் ஆகியோரும் வருகையளித்தனர்.