NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: பக்காத்தான் தலைவர்கள் பிரச்சாரத்தில் இறங்கவிருக்கின்றனர்!

பொந்தியான், நவ.8-

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மேலும் பல தலைவர்கள் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட களம் இரங்கவிருக்கின்றனர்.

பக்காத்தான் உயர்மட்ட தலைவர்களில் பாக்காத்தான் கூட்டணி தலைவருமான பிரதமர் துன் டாக்டர் மகாதீரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் கூறினார்.
இந்த நாடாளுமன்றத் தொகுதியை பக்காத்தான் தக்க வைப்பதை உறுதி செய்ய பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கட்சியின் கேந்தரத்தை சந்தித்து விவாதிப்பதோடு பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்று அவர் சொன்னார்.

இம்மாதம் 11ஆம் தேதி அன்று காலை 6 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை 4 இடங்களில் டத்தோஸ்ரீ அன்வார் பிரச்சாரம் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :