雪州行政议员黄思汉。
SELANGOR

நிதானமாகச் செயல்பட்ட எம்பிஎஸ்ஏ அமலாக்க அதிகாரிகள்! ஆட்சிக் குழு உறுப்பினர் பாராட்டு

ஷா ஆலம், பிப்.10-

கடுமையான சூழலிலும் நிதானமாகச் செயலாற்றிய ஷா ஆலம் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையை ஊராட்சி துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் பாராட்டினார். சற்றும் எதிர்பாராத சூழலை வெகு சாமர்த்தியமாக எதிர்கொண்ட அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையானது அவர்களின் நிதானத்தை வெளிப்படுத்துகிறது என்றார் அவர்.

“தனது கடமையை ஆற்றும் அதிகாரியிடம் கடுமையாக நடந்து கொள்வது குற்றமாகும். எனவே பொது மக்கள் விதிமுறைகள் பின்பற்றி நடந்து கொள்வர்” எனத் தான் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
“வாகனத்தை அகற்றாமல் சென்ற அதிகாரியின் நடவடிக்கையானது சமரச செயல் என்று பொருள்படாது. மாறாக. பிறரைப் பாதிக்கக் கூடுய வன்முறையைத் தடுத்து நிறுத்தவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சுங்கை பூலோ பாருவில் உள்ள செக்ஸன் யூ20-இல் வாகனத்தை நிறுத்தத் தடைவிதிக்கப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை இழுத்துச் செல்ல முயன்ற அதிகாரிகளின் நடவடிக்கையை கண்ணுற்று வாகனத்தின் உரிமையாளரான ஒரு மாது, சித்தம் கலங்கியவர் போன்று வெறித்தனமாக நடந்து கொண்டார்.


Pengarang :