ஷா ஆலம், மார்ச் 28:
கோவிட்-19 நோய் தொடர்பில் நாடு எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவுரை கூறினார்.
” இந்த மிக முக்கியமான காலக்கட்டத்தில் பொய்யான மற்றும் கேளிக்கை தகவல்களை பரப்பி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்,” என்று தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார் ன.
வோட்ஸ்அப் புலனத்தில் சுகாதார அமைச்சின் துணை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் கிரிஸ்டிபர் லீ கோவிட்-19 தொடர்பில் குரல் பதிவு என பொய்யான தகவலை மேற்கொள் காட்டி அமிருடின் ஷாரி இவ்வாறு கூறியிருக்கிறார்.