TOKYO, 24 Okt — Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah dan Raja Permaisuri Agong Tunku Hajah Azizah Aminah Maimunah Iskandariah berangkat pulang ke ibu negara hari ini, selepas berada di sini sejak Isnin, bagi menghadiri Upacara Pertabalan Maharaja Naruhito yang berlangsung pada Selasa lalu. ?–fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

அரண்மனை: மாமன்னர் தம்பதியினருக்கு கோவிட்-19 பாதிப்பில்லை !!!

கோலா லம்பூர், ஏப்ரல் 9:

மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா தம்பதியினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு கோவிட்-19 பாதிப்பிலிருந்து விடுபட்டதாக இஸ்தானா நெகாரா இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாட்சில் சம்சுடின் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபி) போது மக்கள் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று மாமன்னர் தம்பதியினர் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார். மக்கள் வீட்டில் இருப்பதன் வழி கோவிட்-19 நோய் பரவலை எதிர்க்க உதவ முடியும் என்று மாமன்னர் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

நாடு எதிர் நோக்கும் இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் முன்னணி பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், இராணுவத்தினருக்கு தங்களின் நன்றியைத் தெரிவித்து, கோவிட்-19 பாதிப்பால் மரணமுற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தங்களின் ஆறுதலை மாமன்னர் தம்பதியினர் தெரிவித்துக் கொண்டனர்.


Pengarang :