ஷா ஆலம், டிச 4- இவ்வாண்டு இறுதிக்குள் வர்த்தக உரிமத்தை புதுப்பிக்கும்படி வணிகர்களை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்திற்கு 200 வெள்ளி அபராதமும் அடுத்து வரும் மாதங்களுக்கு 700 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்று நகராண்மைக் கழக தலைவர் முகமது பவுசி முகமது யாத்திம் கூறினார். https//.www.icomm.gov.my. எனும் அகப்பக்கம் வாயிலாக வர்த்தக உரிமத்தை வணிகர்கள் புதுப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த அக்டோபர் முதல் தேதி தொடங்கி நவம்பர் 17 ஆம் தேதி வரை நகராண்மைக் கழக பகுதியில் உள்ள 9,959 வணிகர்களில் 804 பேர் தங்கள் வர்த்தக உரிமத்தை புதுப்பித்து விட்டதாக கூறிய அவர், இதன் மூலம் 530,653.30 வெள்ளி வசூலிக்கப்பட்டது என்றார்.
|
|
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2019/04/MPAJ-NEW.jpg)