ஷா ஆலம், டிச 4- இ-பசார் 11.11 எனும் இயங்கலை வாயிலான விற்பனை பெருவிழாவின் வழி மூன்று கோடி வெள்ளி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக முதலீட்டுத் துறைகளை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார். கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்ட வணிகர்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு இத்திட்டம் துணை புரிவதாக அவர் சொன்னார். இயங்கலை வாயிலான வர்த்தகம் துரித வளர்ச்சி கண்டு வரும் துறையாக விளங்கு வதோடு அதிக வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. ஆகவே, வணிகர்கள் இத்துறையில் ஈடுபட முனைப்பு காட்ட வேண்டும் என்றார் அவர். பொருளாதார மீட்சியை விரைவு படுத்துவதில் இலக்கவியல் முக்கிய பங்கை ஆற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அத்துறையில் வணிகர்கள் அதிகளவில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்தார். நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த இணைய வர்த்தக விருதளிப்பு நிகழ்வில் அவர் இதனைக் கூறினர். இயங்கலை வாயிலாக லஸாடா மற்றும் ஷோப்பி ஆகிய நிறுவனங்களில் செய்யப்பட்ட வர்த்தக உபரி மதிப்பு 70 கோடி வெள்ளியை எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2016/12/yb-teng.jpg)