ECONOMYPBTSELANGOR

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை டிசம்பர் 20  வரை நீட்டிப்பு- மூன்று மாவட்டங்களுக்கு விதிவிலக்கு

ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் மாநிலத்தில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் 
கட்டுப்பாட்டு ஆணை இம்மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். 

எனினும், சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்த ஆணையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் கடுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

சிலாங்கூர் தவிர்த்து கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவிலும் இந்த கட்டுப்பாட்டு 
ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு சிலாங்கூரில் கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி நிபந்தனையுடன்
கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

Pengarang :