ஷா ஆலம், டிச 13: சிலாங்கூர் முழுவதும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.டி) அமல்படுத்துவது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவுவதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் அசாம் ஜமாலுதீன், இந்தச் செய்தி உண்மை இல்லை என்றும், பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படியும், அதை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
அங்கீகரிக்கப்படாத தகவல்களைப் பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “இந்தச் செயல் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறது மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும், அச்சுறுத்தும்” செயல் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
.