ECONOMYPBTSELANGOR

கோலக் கிள்ளான் பால சுப்பிரமணியர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா  – குணராஜ்-சார்ல்ஸ் சந்தியாகோ வருகை

கோலக் கிள்ளான், ஏப் 26- இங்குள்ள பால சுப்பிரமணியர் ஆலயத்தில் வருடாந்திர சித்ரா பௌர்ணமி திருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்து முருகப் பெருமானை வழிபட்டதோடு  தங்களின் நேர்த்திக் கடன்களையும் செலுத்தினர்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் இவ்விழாவுக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.

கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்களான எம். நலன், ஆதி சரவணன், மகேந்திரன் மாரிமுத்து, பிரபு முனுசாமி இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கருத்தில் கொண்டு இவ்வாண்டு திருவிழா மிதமான அளவில் கொண்டாடப்பட்டதோடு தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி.எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன.


Pengarang :