ECONOMYHEALTHPBTSELANGOR

விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. மற்றும் அதன் கிளை அலுவலகங்கள்  இன்று தொடங்கி மூடப்படும்

ஷா ஆலம், மே 17– இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. தலைமையகம் மற்றும் அதன் கிளை அலுவலகங்கள் இன்று தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை பணியாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்.

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அலுவலகங்களிலும் கிருமி  நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஷா ஆலம் மாநர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

பொதுமக்கள் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, எந்நேரமும் முகக் கவசம்  அணிவது, அடிக்கடி  கைகளைக் கழுவுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :