ECONOMYHEALTHNATIONALSELANGOR

நாட்டில் இன்று 6,493 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 2,163 நேர்வுகள்

கோலாலம்பூர், மே 21– நாட்டில் இன்று 6,493 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. சிலாங்கூர் மாநிலம் 2,163 சம்பவங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

சிலாங்கூருக்கு அடுத்து கோலாலம்பூரில் 641 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் 612 சம்பவங்களும் கிளந்தானில் 467 சம்பவங்களும் கெடாவில் 434 சம்பவங்களும் ஜோகூரில் 406 சம்பவங்களும் பேராக்கில் 382 சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 370 சம்பவங்களும் பினாங்கில் 302 சம்பவங்களும் மலாக்காவில் 165 சம்பவங்களும் பகாங்கில் 161 சம்பவங்களும் சபாவில் 144 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.

திரங்கானுவில் 139 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்து லபுவான் (84), புத்ரா ஜெயா (20), பெர்லிஸ் (3) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

இதன் வழி நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 498,795ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :