ஷா ஆலம், மே 22- கின்ராரா மற்றும் ஸ்ரீ செர்டாங் தொகுதிகளில் இன்று நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க இதுவரை நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு பொதுமக்களை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கேட்டுக் கொண்டார். பூச்சோங், புக்கிட் கின்ராரா 2 சமூக மண்டபத்தில் நடைபெறும் பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க சுமார் இரண்டாயிரம் பேர் பதிவு செய்துள்ள வேளையில் டேவான் பூச்சோங் உத்தாமா 7இல் நடைபெறும் மற்றொரு பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்பதற்கும் அதே எண்ணிக்கையிலானோர் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பரிசோதனை இயக்கம் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இம்மாதம் 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்ற தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருகிறது. இதுவரை 14 தொகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோ