ECONOMYPress StatementsSELANGOR

சுபாங் ஜெயாவில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை- 5,000 பேர் முன்பதிவு

பூச்சோங், மே 23– சுபாங் ஜெயாவில் இன்று நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள நேற்று பிற்பல் வரை சுமார் ஐயாயிரம் பேர் பதிவு செய்திருந்தனர்.

யு.எஸ்.ஜே.1 விளையாட்டு மையத்தில் நடைபெறும் இந்த பரிசோதனை இயக்கத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பொதுமக்களுக்கு தனித் தனி வருகை நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

கோவிட்-19 பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதற்கு எதுவாக செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ள பலர் நேரில் மண்டபத்திற்கும் வரக்கூடும் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போத 20 முதல் 40 வயது வரையிலானோர் மத்தியில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் இளைஞர்கள் அதிகளவில் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

இன்று யு.எஸ்.ஜே.1 விளையாட்டு வளாகத்திலும் எம்.பி.பி.ஜே. சமூக மண்டபத்திலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடைபெறுகிறது.


Pengarang :