ஷா ஆலம், ஜூன் 16- நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐயாயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இன்று பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 5,150 ஆகும்.
மொத்தம் 1,914 சம்பவங்களுடன் சிலாங்கூர் நோய்த் தொற்று எண்ணிக்கையில் முதலிடம் வகித்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று நாட்டில் 5,419 சம்வங்களும் சிலாங்கூரில் 1,996 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
மாநில வாரியாக நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
நெகிரி செம்பிலான் (607), சரவா (570), கோலாலம்பூர் (480), ஜொகூர் (392), கிளந்தான் (230), கெடா (228), சபா (184), மலாக்கா (152), லபுவான் (191), பினாங்கு (99), பேராக் (66), பகாங் (57), திரங்கானு (56), பெர்லிஸ் (8), புத்ரா ஜெயா (6).