ஷா ஆலம், ஜூன் 18– கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை மீண்டும் ஆறாயிரத்தை தாண்டியது. இன்று 6,440 நோய்த் தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவான வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 5,738 ஆக இருந்தது.
இன்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை 685,204 பேர் கோவிட்-10 நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
மாநில வாரியாக நோய்த் தொற்று சம்வங்களின் எண்ணிக்கை வருமாறு-
சிலாங்கூர் (2,095), கோலாலம்பூர் (816), சபா (199), ஜொகூர் (592), சரவா (536), நெகிரி செம்பிலான் (870), கிளந்தான் (200), பினாங்கு (122), பேராக் (357), கெடா (259), மலாக்கா (223), பகாங் (79), திரங்கானு (32), லவுவான் (152), புத்ரா ஜெயா (6), பெர்லிஸ் (2).