HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

இன்று  ஐயாயிரத்தை  தாண்டியது கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை- சிலாங்கூரில் 2,001 பேர் பாதிப்பு

இன்று  ஐயாயிரத்தை  தாண்டியது கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை- சிலாங்கூரில் 2,001 பேர் பாதிப்பு

 

ஷா ஆலம், ஜூன் 23- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று மீண்டும் ஐயாயிரத்தை தாண்டியது. இன்று 5,244 சம்பவங்கள் பதிவான வேளையில் சிலாங்கூரில் 2,001 பேருக்கு நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டன. 

கடந்த இரு தினங்களாக நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூருக்கு அடுத்த அதிக எண்ணிக்கையை அதாவது 677 சம்பவங்களை நெகிரி செம்பிலான் பதிவு செய்தது. சரவா (577), கோலாலம்பூர் (189), ஜொகூர் (282), பகாங் (245), கெடா (189) மலாக்கா (180), பினாங்கு (159) அகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.


Pengarang :