ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

ஸ்ரீ ஆயு குடியிருப்பு பகுதிக்கு மந்திரி புசார் வருகை- தடுப்பூசி இயக்கத்தை பார்வையிட்டார்.

பாங்கி- ஜூலை 10- பண்டார் பாரு பாங்கி, செக்சன் 4இல் உள்ள பங்சாபுரி ஸ்ரீ ஆயு பகுதிக்கு இன்று வருகை புரிந்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அங்கு ஒரு மணி நேரத்தை செலவிட்டு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.டி.) ஆணையின் அமலாக்க்த்தை பார்வையிட்டார்.

இந்த பயணத்தின் போது அக்குடியிருப்பைச் சேர்ந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அவர் சென்று கண்டார். மாவட்ட அதிகாரி நஜ்முடின் ஜெமாய்னும்  மந்திரி புசாருடன் உடனிருந்தார்.

நோய்த் தொற்று அதிகமாக பதிவானதைத்  தொடர்ந்து பங்சாபுரி  ஸ்ரீ ஆயும பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் வரும் 13 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் 205 நோய்த் தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளன.


Pengarang :