ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

நாட்டில் இன்று 12,541 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், ஜூலை 16- நாட்டில்  இன்று  12,541 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாயுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை 13.215 ஆக இருந்தது.

இன்றைய சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 893,323 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தொற்று எண்ணிக்கையில் 5,512 சம்பவங்களுடன் சிலாங்கூர் முன்னிலையில் வகிக்கிறது. நேற்று இம்மாநிலத்தில் 6.120  சம்பவங்கள் பதிவாகின.

நெகிரி செம்பிலானில் 1,619 பேரும் கோலாலம்பூரில் 1,542 பேரும் ஜொகூரில் 609 பேரும் சபாவில் 326 பேரும் சரவாவில் 423 பேரும் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாநில வாரியாக வருமாறு- பினாங்கு (376), கிளந்தான் (225), கெடா (458), பேராக் (299), மலாக்கா (575), திரங்கானு (102), லபுவான் (24), புத்ரா ஜெயா (62), பெர்லிஸ் (7).


Pengarang :