ஷா ஆலம், ஆக 30- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நிலையில் சிலாங்கூரில் அந்த எண்ணிக்கை அபரிமிதமாக குறைந்து 3,567 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை 6,936 ஆக இருந்த மாநிலத்தின் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை வெள்ளி (5,920), சனி (5,815) மற்றும் ஞாயிற்றுக் கிழமை (4,591) படிப்படியாக குறைந்து வருகிறது.
சிலாங்கூர் மாநிலம் கடந்த ஜூலை மாதத்தில்தான் கடைசியாக 3,000 கோவிட் சம்பவங்களைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நாடு முழுவதும் 19,268 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நாட்டின் நான்கு மாநிலங்களில் 2,000க்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறிய அவர், சபா (2,310), ஜொகூர் (2,265), கெடா (2,084), சரவா (2,028) ஆகியவையே அம்மாநிலங்களாகும் என்றார்.
இவை தவிர பினாங்கில் 1,780 சம்பவங்களும் கிளந்தானில் 1,308 சம்பவங்களும் பேராக்கில் 1,144 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
பகாங் (788), கோலாலம்பூர் (672), திரங்கானு (544), மலாக்கா (395), பெர்லிஸ் (71), புத்ரா ஜெயா (41), லபுவான் (2).