ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கிளப் மீடியா சிலாங்கூருக்கு 100 உணவுக் கூடைகள்- எம்.பி.ஐ. வழங்கியது

ஷா ஆலம், செப் 2- மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் சமூக நல அமைப்பான கிரிஸ்இமாஸ் அமைப்பிற்கு எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் 100 உணவுக் கூடைகளை வழங்கியது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த உணவுப் பொருள் வழங்கப்படுவதாக எம்.பி.ஐ. நிறுவனத்தின் நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

தற்போதைய சூழலில் மக்களை  நேரடியாக அணுகுவதற்குரிய சாத்தியம் இல்லை. ஆகவே, இத்தகைய திட்டங்கள் வாயிலாக சமுதாயத்தை நெருங்குவதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது என அவர் சொன்னார்.

ஒவ்வொரு உணவுக் கூடையும் அரிசி, சமையல் எண்ணெய், சீனி, பீகூன் உள்பட 70 வெள்ளி பெறுமானமுள்ள பொருள்களை உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று இங்குள்ள மீடியா சிலாங்கூர் அலுவலகத்தில் இப்பொருள்களை ஒப்டைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த உணவுக் கூடைகளை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கி மேற்கொள்ளப்படும் என்று கெரிஸ்இமாஸ் கிளப்பின் தலைவர் பட்ருள் ஹிஷாம் முகமது கூறினார்.

இந்த உணவுக் கூடைகள் மீடியா சிலாங்கூர் பணியாளர்களுக்கு மட்டுமின்றி குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினருக்கும் வழங்கப்படும். இது தவிர, கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மீடியா சிலாங்கூர் முன்னாள் பணியாளர்களுக்கும் இந்த உணவுப் பொருள்களை விநியோகிக்கவுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :