ஷா ஆலம், செப் 3– நாட்டில் இன்று கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,378 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 20,988 ஆக இருந்தது.
சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை நேற்றை விட 400 குறைந்து 3,613 ஆக ஆகியுள்ளதை சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா சமூக ஊடகங்கள் வழி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
சரவா, சபா மற்றும் ஜொகூரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அம்மாநிலங்களில் முறையே 2,464, 2,404 மற்றும் 2,331 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலங்களில் பினாங்கு (1,726), கெடா (1,470), பேராக் (1,389), கிளந்தான் (1,356) ஆகியவை உள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
கோலாலம்பூர் (740), பகாங் (559), திரங்கானு (532), மலாக்கா (399), நெகிரி செம்பிலான் (270), பெர்லிஸ் (80), புத்ரா ஜெயா (41), லபுவான் (4).