ஷா ஆலம், செப் 6- சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள சுங்கை பாஞ்சாங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை தாங்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் அளித்த சிலாங்கூர் வன பாதுகாப்பு கூட்டமைப்புக்கு எதிராக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்) அவதூறு வழக்கை தொடுக்கவுள்ளது.
இம்மாதம் 2 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குளோபல் என்வாய்ரமெண்ட் சென்டர் (ஜி.இ.சி.) இயக்குநர் பைசால் பாரிஷ் வெளியிட்ட பொறுப்பற்ற அறிக்கை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக அக்கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது. (விரிவான செய்திகள் சற்று நேரத்தில்)