கோலாலம்பூர், செப் 6- நாட்டில் நேற்று வரை 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 68 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 601 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடியே 64 லட்சத்து 31 ஆயிரத்து 562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் உள்பட நாட்டில் 1 கோடியே 543, 016 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது கூறியது.
இதனிடையே, நேற்று நாடு முழுவதும் 289,958 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 136,177 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 153,841 பேர் இரண்டாது தடுப்பூசியையும் பெற்றனர்.