ஷா ஆலம், செப் 13- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்று 1,947 ஆக குறைந்துள்ளது. ஆகக் கடைசியாக கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி இம்மாநிலம் குறைவான அதாவது 1,996 சம்பவங்களைப் பதிவு செய்தது.
இதனிடையே, நாடு முழுவதும் நோய்த் தொற்று எண்ணிக்கை 16,073 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நாட்டில் நேற்று நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 19,198 ஆக இருந்ததாக அவர் சொன்னார்.
சரவா மாநிலத்தில் நோய்ப் பரவல் எண்ணிக்கை சற்று குறைந்து 3,522 ஆக ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜொகூரில் 2,030 நேர்வுகள் பதிவாகியுள்ளன.
சபா (1,649), பினாங்கு (1,243). கெடா (1,191), பேராக் (1,011), கிளந்தான் (1,070) ஆகிய மாநிலங்கள் ஆயிரத்திற்கும் அதிகமான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- பகாங் (878), திரங்கானு (704), கோலாலம்பூர் (398), மலாக்கா (206), நெகிரி செம்பிலான் (156), பெர்லிஸ் (41), புத்ரா ஜெயா (16), லபுவான் (11).