ஷா ஆலம், நவ 21 : சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலு லங்காட், சிப்பாங், கோலா லங்காட், கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய இடங்களில் மாலை 5 மணி வரை மோசமான வானிலை நிலவும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், பெர்லிஸ், கெடா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் சபா ஆகிய இடங்களிலும் இதே வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
பினாங்கு, பேராக், கிளந்தான், பகாங், கோலாலம்பூர், புத்ராஜெயா, சரவாக் ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.