ஷா ஆலம் 26 நவ;-: 2022 ஆண்டு தொடங்கி உருவாக்கப்படும் சுங்கை கிள்ளான் நீடித்த மேம்பாட்டுத் திட்டத்தில் 26, 000 வீடுகள் கட்டப்படவிருப்பதாக சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார்.
இதற்காக சுங்கை கிள்ளான் ஆற்று வழிதடப் பகுதியில் 56 கிலோமீட்டர் தூரத்திற்கு அடுத்துவரும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு 26,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும். சுங்கை கிள்ளான் ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் அமல்படுத்தப்படும் மற்றொரு பொருளாதார திட்டமாக இது அமைவதாக அமிருடின் ஷாரி கூறினார்.
வாங்கக்கூடிய விலையில் 2,000 வீடுகளும், சுதந்திரமான விலையில் 1,400 வீடுகளும் கட்டப்படும் என அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அமிருடின் ஷாரி இத்தகவலை வெளியிட்டார்.