ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று 1,453 காக்கைகள் சுடப்பட்டன

ஷா ஆலம், நவ 29- ஷா ஆலம் வட்டாரத்தில் காக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 1,453 காக்கைகள் சுடப்பட்டன.

அதிகாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த காக்கை சுடும் நடவடிக்கையில் 10 பேர் பங்கேற்றதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின்  வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

காக்கைகளால் இரைச்சல் மற்றும் பொது இடங்களில் அசுத்தம் ஏற்படுவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து தாங்கள் புகார்களைப் பெற்று வந்ததாக அவர் சொன்னார்.

இதன் அடிப்படையில் ஷா ஆலம் வட்டாரத்தில் காக்கைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த பறவைகளைச் சுடும் இயக்கம் நேற்று மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

 

 

 

 

 

 


Pengarang :