சிலாங்கூர் தொழில்துறை அகண்ட அலை வரிசை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலிட்டாளர்கள் தங்களது முதலீடு நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் முதல் தேர்வாக இருப்பதை வலுப்படுத்துவதற்காக சிறிய, நடுத்தர மற்றும் பன்னான்டு நிறுவனங்களுக்கு மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளோடு தொழில்மய பகுதிகளில் நடமாடும் வசதியைக் கொண்ட அகண்ட அலைவரிசை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். சிலாங்கூர் மாநிலத்தில் முன்னணி தொலைதொடர்பு வசதிக்கான ஏற்பாட்டாளராக இருக்கும் SMARTSEL உயர் தொழிற்நுட்ட பகுதியில் அகண்ட அலைவரிசையை வசதியை மேம்படுத்துவதற்கு தற்போது இருந்துவரும் தொலைதொடர்பு துறையைச் சேர்ந்த தரப்பினருடன் ஒத்துழைக்கும். இதற்காக 2022 ஆம் ஆண்டுக்கு 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.