ஷா ஆலம், டிச 6– சுபாங் ஜெயா வட்டார மக்கள் ஷோப்பி செயலி வாயிலாக மதிப்பீடு வரியை செலுத்தி 10 விழுக்காட்டு கழிவைப் பெறும்படி சுபாங் ஜெயா மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சலுகை இம்மாதம் 1 ஆம் ஒன்றாம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநகர் மன்றம் அறிக்கை வழி தெரிவித்தது.
சுபாங் ஜெயா வட்டார மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக மாநகர் மன்றம் ஷோப்பி மலேசியாவுடன் இணைந்து பத்து விழுக்காட்டு கட்டணக் கழிவை வழங்குகிறது என்று அது கூறியது.
My@MBSJ வில் உறுப்பினராக பதிவு செய்வதன் மூலம் ஷோப்பி செயலியை பதிவிறக்கம் செய்து இந்த கட்டணக் கழிவு சலுகையை பெற முடியும் என்றும் மாநகர் மன்றத்தின் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
வாடிக்கையாளர்கள் மேல் விபரங்களைப் பெறுவதற்கு கியுஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். அல்லது https://www.mbsj.gov.my/ என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.