ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

கடும் எஸ்.ஒ.பி. விதிகளுக்கு மத்தியிலும் சிலாங்கூர் புத்தக விழாவுக்கு அமிரிமித ஆதரவு

ஷா ஆலம், டிச 12- கடுமயான நிர்வாக செயலாக்க நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும் 2021 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் புத்தக விழாவுக்கு பொது மக்களிடமிருந்து அபரிமித ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த புத்தக விழா கடந்தாண்டைப் போலவே மந்தமாக இருக்கும் என்ற தங்களின் கணிப்பையும் மீறி பெரும் எண்ணிக்கையிலானோர் இவ்விழாவுக்கு வருகை புரிந்ததாக ஹிஜ்சாஸ் ரெக்காட்ர்ஸ் பப்ளிஷிங் நிர்வாகி ஷமில் அமிர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று மீதான அச்சம் காரணமாக கடந்தாண்டில் இந்த புத்தக விழாவுக்கு அவ்வளவாக மக்கள் கூட்டம் திரளவில்லை என்று அவர் சொன்னார்.

எனினும் அனைவரும் தடுப்பூசி பெற்றுள்ளது  மற்றும் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமலாக்கம் ஆகிய காரணங்களால் இம்முறை அதிகமானோர்  இந்த புத்தக விழாவுக்கு வருகை புரிந்தனர் என்றார் அவர்.

இம்முறை அதிகானோர் இந்த விழாவுக்கு வருகை புரிவர் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால் நாங்கள் அதிக புத்தகங்களையும் கொண்டு வரவில்லை. இருந்த போதிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டில் நிறைய வருமானம் கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :