ECONOMYHEADERADMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் மக்களின் நலனுக்கு துங்கு மக்கோத்தா ஜோகூர் பிராத்தனை.

ஷா ஆலம், டிச.21: கடந்த சனிக்கிழமை முதல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில், பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகளை அனுப்பிய துங்கு மக்கோத்தா ஜோகூர் சிலாங்கூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறார், மேலும் உதவிகளை அனுப்ப தயாராக இருக்கிறார்.

நேற்று உலு லங்காட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவி மற்றும் குழந்தைத் தேவைகளான பால் மற்றும் டிஸ்போசபிள் டயப்பர்கள் தெற்கு  மண்டல தன்னால்வாளர்கள் மூலம் வழங்கப்பட்டது.

துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், எதிர்காலத்தில் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றார். “டத்தோ’ மந்திரி புசார் மற்றும் சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும் கடவுள் ஆசிர்வதிக்கவும் வலிமை அளிக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்.

“உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். கடவுள் ஆசியில்,  நான் மீண்டும் உதவுவேன். நாளை மறுநாள் மேலும் உதவிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்’’ என ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, துங்கு மக்கோத்தா ஜோகூர் செய்த உதவிக்கு தனது அன்பை வெளிப்படுத்திய டத்தோ ‘ஸ்ரீ அமிருடின் ஷாரியின் ட்விட்டருக்கு பதிலளித்திருந்தார்,“உங்கள் உதவிக்கும் ஆதரவிற்கும் நன்றி. துங்குவின் அக்கறையை நான் மிகவும் பாராட்டுகிறேன்,” என்றார் அமிருதீன்.


Pengarang :