ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை 15,146 ஆக குறைந்தது

ஷா ஆலம், டிச 26- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்றிரவு 8.21 மணி வரை  95 தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 15,146 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 17,912 ஆக இருந்தது.

பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வது மற்றும் குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மாநில அரசு மேலும் தீவிரப்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மந்திரி புசார் நேற்று முன்தினம் முதல் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஷா ஆலம், கிள்ளான், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று கண்டு உதவிகளை வழங்கி  வருகிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உலு லங்காட் பகுதியை மறு நிர்மாணிப்பு செய்ய சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :