Longgokan sampah dan barang yang rosak di Taman Sri Muda, Seksyen 25, Shah Alam pada 25 Disember 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான், ஷா ஆலமில் குப்பைகளை அகற்றும் பணி 50 விழுக்காடு பூர்த்தி

ஷா ஆலம், டிச 26 - கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி 50 விழுக்காட்டை எட்டியுள்ளதாக  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

குப்பைகளை அகற்றுவதில் திருப்திகரமான நிலையை எட்டாத பகுதிகளில் செயலாக்க முறையை விரைவுபடுத்தும்படி தாம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

துப்புரவு நோக்கங்களுக்காக மேலும் அதிகமான லோரிகளைப் பெற  பல தரப்பினரை தாங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்பும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மனித வளம் வீணடிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய  இந்த செயல்முறையை மாநில அரசு சீரமைக்க விரும்புகிறது. மேலும் இந்த ஒருங்கிணைப்பு தன்னார்வலர்களின் பாதுகாப்பிற்கும் முக்கியமானது என்றார் அவர்.

Pengarang :