ஷா ஆலம், டிச 28– குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசி பெற்றவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மூத்த குடிமக்கள், பெரியவர்கள் மற்றும் நோய்த் தாக்கம் உள்ளவர்கள் வரும் ஜனவரி தொடங்கி இந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
முன்னதாக, சினோவேக் தடுப்பூசியைப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.