ஷா ஆலம், ஜன 20- தடுப்பூசியைப் பெற்ற பின்னர் லேசான பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து பொது மக்கள் மைசெஜாத்ரா செயலி வாயிலாக தெரிவிக்கலாம்.
பட்டியலில் இடம் பெறாத அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் ஆலோசனை அல்லது சிகிச்சை பெறுவதற்காக அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடும்படி சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டது.
நீங்கள் அணுகும் சுகாதார அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உதவுவார் என்று அமைச்சின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்கவிளைவுகள் குறித்து தெரிவிப்பதற்கான வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.