ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாள்- எழு மாவட்டங்களைச் சேர்ந்த 153 பேருக்கு விருதுகள்

ஷா ஆலம், ஜன 26-  மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் 75 வது  பிறந்தநாளை முன்னிட்டு ஏழு மாவட்டங்களை  சேர்ந்த 153 பேர் பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், கோல லங்காட், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகளைப் பெற்றனர்.

அவர்களில் 3 பேருக்கு பிங்காட் பெக்கர்த்தி தெர்பிலே (பி.பி.டி) விருதும் 55 பேருக்கு பிங்காட பெர்ஹிட்மத்தான் செமெர்லாங் (பி.பி.சி.) விருதும் 84 பேருக்கு பிங்காட் ஜாசா கெபக்தியான் (பி.கே.கே.) விருதும் 11 பேருக்கு பிங்காட் பெர்ஹிட்மத்தான் சிலாங்வர் (பி.பி.எஸ்.) விருதும் வழங்கப்பட்டன.

இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சிலாங்கூர் சுல்தான் சார்பில் ராஜா மூடா சிலாங்கூர் துங்கு அமீர் ஷா தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


Pengarang :