ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

5 முதல் 11 வயதுக்குட்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 6: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் நேற்று மொத்தம் 1,003,227 பேர் அல்லது 28.3 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 241 பேர் அல்லது 63.7 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர். அதோடு 2 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 98 பேர் அல்லது 97.4 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் மற்றும் 29 லட்சத்து 30 ஆயிரத்து 978 பேர் அல்லது 94.2 விழுக்காட்டினர் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் 28 லட்சத்து 30 ஆயிரத்து 746 பேர் அல்லது 91 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 30 ஆயிரத்து 978 பேர் அல்லது 94.2 விழுக்காட்டினர் தடுப்பூசியின் ஒரு டோஸ் பெற்றுள்ளனர்.

29,714 முதல் டோஸ்கள், 903 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 37,464 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 68,081 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசியின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 76 லட்சத்து 72 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 67 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 


Pengarang :