ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

எம்பிஎஸ்ஜே மேலும் மூன்று மீட்புப் படகுகளை பெற்றது

ஷா ஆலம், மார்ச் 15: வெள்ள முன் எச்சரிக்கையாகச் சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) உடனடி நடவடிக்கை குழு பயன்பாட்டிற்கு மூன்று மீட்புப் படகுகளைச் சேர்த்தது.

முன்கூட்டியே பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஒரே நேரத்தில் ஏற்படும் அவசரச் சூழ்நிலைகளில் உதவி வழங்க அணிக்கு எளிதாக இருக்கும் என்று அதன் கார்ப்பரேட் மற்றும் மூலோபாய மேலாண்மைத் துறையின் துணை இயக்குநர் கூறினார்.

“இந்தப் பொருட்களைச் சேர்ப்பது மற்ற பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து உதவி வருவதற்கு முன்னர் ஆரம்ப உதவிகளை வழங்க உறுப்பினர்களுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது” என்று அஸ்பரிசல் அப்துல் ரஷீத் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உள்ளாட்சி அமைப்பு (PBT) வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்து, வடிகால் பராமரிப்பு தொடர்ந்து செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது.

எம்பிஎஸ்ஜே, வானிலை எச்சரிக்கைகள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய கனமழையின் போது எப்பொழுதும் விழிப்புனும் தயாராகவும் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏதேனும் புகார்கள் அல்லது அவசர நிலைகளுக்குச் சுபாங் ஜெயா கட்டுப்பாட்டு மையத்தை 03 8024 7700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :