ஷா ஆலம், மார்ச் 15: அம்பாங்கில் உள்ள தாமான் புக்கிட் பெர்மாயில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கேடிஇபி கழிவு மேலாண்மை வாரியம் இன்று மீண்டும் நிவாரணப் பணிகளைத் தொடங்கியது.
ஏஜென்சியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையில், குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் நுழைவதைத் தடுக்க நீர்வழிகள் மீது மணல் அணைகளை அமைத்தனர்.
” நீர் ஓட்டத்தைச் சீராக்க வடிகால் மணல் தோண்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என்று பேஸ்புக் மூலம் தெரிவித்தது.
நிவாரண நடவடிக்கையில் அம்பாங் ஜெயா கிளையில் இருந்து 11 ஊழியர்களும் ரோரோ எனப்படும் குப்பைத் தோம்புகளை ஏற்றும் இரண்டு லாரிகளும் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த வியாழன் அன்று, அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2 இல் நிலச்சரிவு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் லேசான காயம் அடைந்தார், அத்துடன் 15 வீடுகள் மற்றும் 10 வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்தில் வீட்டுக் கழிவு சேகரிப்பு மற்றும் பொது சுத்தம் செய்வது குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் நபர்கள் 1-800-88-2824 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது iClean Selangor பயன்பாட்டைப் பதிவிறக்கலாம் என்று கேடிஇபி கழிவு மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.