ஷா ஆலம், மார்ச் 20: RM3,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் பெறும் சுங்கை ரமால் சட்டமன்ற வாக்காளர்கள், ஹரி ராயா பெருநாளுக்கான RM100 ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
அதன் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹர், மார்ச் 25 வரை மாநில அரசின் ஜோம் ஷாப்பிங் பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்ய உள்ளூர் முஸ்லீம் குடியிருப்பாளர்களும் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களும் அழைக்கப்படுவதாக கூறினார்.
“விண்ணப்பப் படிவங்களை சுங்கை ரமால் சட்டமன்ற சமூக சேவை மையத்தில் பெறலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி மார்ச் 25,” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலப் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம் (கிஸ்) மற்றும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ்.எம்.யு.இ.) ஆகியவற்றைப் பெறுபவர்களுக்கு பற்றுச் சீட்டுகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டை மற்றும் வருமான அத்தாட்சி சான்றிதழ் அல்லது சீட்டின் நகலை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.