கோலாலம்பூர், மார்ச் 22 – அடுத்த 20 ஆண்டுகளுக்கு தீவிர இயற்கை மிரட்டலாகவுள்ள வானிலை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விளைவுகளை எதிர்கொள்ள கோலாலம்பூரின் தயார் நிலை குறித்து இன்று மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறிப்பில் கூட்டரசு பிரதேச செத்தியவாங்சா எம்.பி நிக் நஸ்மி நிக் அகமது, அமைச்சரிடம் தீவிர இயற்கை மிரட்டல்கள் குறித்து, கேள்வி எழுப்புவார் என குறிப்பிட்டுள்ளது .
பெருகி வரும் ஒழுங்கின்மை முக்கியமாக ஊழல் வழக்குகளைக் கையாள்வதில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முன்முயற்சி நடவடிக்கைகள் குறித்து புலாய் எம்பி டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் பிரதமரிடம் கேள்வி எழுப்பவுள்ளார்.
இதற்கிடையில், இஸ்லாமிய சமய ஸுன்னா வல் ஜமா போதனைகளுக்கு மாறாக தவறான போதனைகள் மற்றும் சித்தாந்தவாதிகள், துரோகம் மற்றும் மூடநம்பிக்கை போன்றவற்றை சமூகத்தில் இன்னும் பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் மீது சிக் எம்பி அகமது தர்மிசி சுலைமான் பிரதமரிடம் கோர உள்ளார்.
கூட்டத்தொடருக்குப் பிறகு, கிழக்குக் கடற்கரைப் பொருளாதாரப் பகுதி மேம்பாட்டுக் கவுன்சில் (திருத்தம்) மசோதா 2022 இன் முதல் வாசிப்பு, பிரதமர் துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2022, தேசிய வனவியல் (திருத்தம்) மசோதா 2022 மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (திருத்தம்) மசோதா 2021 ஆகியவற்றின் இரண்டாவது வாசிப்பு அமர்வு இன்றைய அமர்வின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய டேவான் ராக்யாட் மார்ச் 24 வரை நடைபெறும்.