லங்காவி, மார்ச் 24 – சிறப்புத் தேர்வுப் பயிற்சியின் கீழ் மொத்தம் 13,225 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
அவர்களில் 307 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியும், 8,120 பேர் மார்ச் 1 ஆம் தேதியும், மேலும் 4,828 ஆசிரியர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதியும் பணியைத் தொடங்குவார்கள் என்று அவர் கூறினார்.
“நாங்கள் 13,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பை முடித்துள்ளோம், அவர்களில் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் அடுத்த மாதம் பணியைத் தொடங்குவர்.
“மீதமுள்ள 5,000 ஆசிரியர்களுக்கு, நாங்கள் கல்வி சேவை ஆணையத்துடன் (SPP) நெருக்கமாக பணியாற்றுவோம், இதனால் மீதமுள்ள காலியிடங்களை விரைவில் நிரப்ப முடியும்” என்று எஸ்எம்கே கெலிபாங்கில் இன்று நடைபெற்ற தேசிய கல்வி அறக்கட்டளை (YDN) மற்றும் AEON அறக்கட்டளை மாணவர் டிஜிட்டல் சாதன திட்டம் விழாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலையில், சபா, சரவாக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பற்றாக்குறைப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சகம் 18,702 ஆசிரியர்களை சிறப்பு ஆள்சேர்க்கும் என்று அறிவித்தார்.