கோலாலம்பூர், மார்ச் 29 – சபாவின் பெலூரானில் நேற்று இரவு 8.39 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.8 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) அறிக்கையின்படி, சபாவின் பிதாஸிலிருந்து 47 கிமீ கிழக்கே ஏழு கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெலூரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கலாம் என தெரிவித்தது.